பக்கம்:இந்தியா எங்கே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 61

(வேறு)

சம்பந்திச் சண்டையில் கோட்டைவிட்டே - ஒரு

சத்துருக் காலில் வீழ்ந்தோமய்யா வீண்

பொம்பளைச் சண்டையில் புத்திகெட்டே இந்த

பொன்னான வாழ்வை இழப்பதுவா?

செங்களத்தில் மாண்ட தீரபரம்பரை

சேமித்த வீர விடுதலையை

தங்கள் சுயநலச் சந்தையி லேபணத்

தாசர்கள் தேசத்தை விற்பதுவா?

கேனர்களும் குடிகேடர் களும்விலை.

மாதர்களும் கலை மூடர்களும்

ஈனவிலைக்கிந்த இமயமலை நாட்டை

எதிரியுடன் விலை பேசுவதா?

ஒட்டுப்பிச்சைக் கேட்டு ஒடித்திரிகிறார்

நாட்டுக்கு யார்நலம் தேடுகிறார்?

வேட்டுவைத்தே விளையாடுகிறார் - இதை

வீரம் என்றே கவிபாடுவதா?

வீட்டுவழக்கினைத் தீர்பபதாகச் சொல்லி

வீட்டை விழுங்குவோன் வக்கீலா?

நாட்டுக்கு நலம்என்று வேட்டுகள்வைப்பவன் நாசவிளையாட்டு தேவைதானா?

ஆயிரம்சண்டை இருந்தாலும் - அவை

அத்தனையும்நம் விவகாரம் பெற்ற

தாயிடம் ஏதுக்கதிகாரம் - அவள்

தலையறுப்பதுவா வீரம்?

நாட்டை எதிரிக்குத் தந்துவிட்டால் - அவன்

நாளை நமக்கு உதை தருவான் சொந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/63&oldid=537624" இலிருந்து மீள்விக்கப்பட்டது