பக்கம்:இந்தியா எங்கே.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 65

எத்தனைஎத்தனை அநியாயம் - பழி

இத்தனைக்கும் யாரிங்குக் காரணமாம்?

சத்தியமாய் அந்தக் காரணத்தை - இங்கு இத்தினமே காண வேண்டுகிறோம்!

பாலைவனத்திலும் சோலையுண்டு - இந்தப் பாவத்துக் கும்பரி காரமுண்டு!

காலையிலே ஒளி காண்பதுண்டு - நம்மை

காந்தியின் சத்தியம் காப்பதுண்டு :

வீரக்கிழவர்கள்போரில் மடிந்தவர்

வெற்றியின் வீர சுதந்திரத்தைப்

பேரக் குழந்தைகள் சீருடன் காத்திடில்

பெற்றிடலாம் இன்பச் செல்வமெலாம்:

தாரணி போற்றிடும் போரணி வீரர்கள்

தலைமையிற் பெற்ற விடுதலையை

பூரணமாய் இனிப் போற்றியே காப்பது

புத்தியுள்ளவரின் கடமையப்பா

தாதாபாய்வீர லாலா லஜபதி

தியாகத் திலகர் சிதம்பரமும்

நேதாஜிபக வத்சிங் குமரனும்

நெஞ்சுயிர் தந்த சுதந்திரமாம்!

இந்தியத் தாயின் இலக்கணமாம் - தேவி

எங்கள் அன்னைகஸ் துரியம்மா

செந்தமிழ்ச் செல்வி வள்ளியம்மை - உயிர்

தந்ததால் வந்தசுதந் திரத்தை

ஏந்திப்பறக்குது இன்றுநம் கோட்டையில்

இந்தியத்தாய் மணிவீரக் கொடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/67&oldid=537628" இலிருந்து மீள்விக்கப்பட்டது