பக்கம்:இந்தியா எங்கே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வான்

வேல்

வான்

வே

ଈ)

நம் தாய்

துணைகள் நமக்கும் இல்லையே என்ற கலக்கந் தான் அடிக்கடியும் வட்டமிடுகிறது.

வேல்விழி! துணையை எங்கு சென்று தேடுவது? நமது நாட்டு வாலிப சந்ததியாரெல்லாம் பிடி பட்டு விலங்கினும் கேவலமாக அடிமைச் சந்தை யில் விற்கப்பட்டு விட்டார்கள். மீதியிருப்பவர்கள் எதிரிகளின் கண்ணில் படாதவாறு இத்தகைய மலைக்காடுகளிலும், மறைவான குகைகளிலும் காலத்தைப் போக்குகிறார்கள். நமது ஆத்ம பலமே நமக்கு உற்றுழி உதவும் முதல் துணை. உலகில் தலைசிறந்தவை நட்பும், உண்மையும், துணிவும். அதை அஸ்திவாரமாகக் கொண்டு, மூண்டெரியும் நமது பழியுணர்ச்சி, தன் இலட்சி யத்தை அடைவது உறுதி. சோதனைகள் வரும். அவற்றைக் கண்டு மலைத்து விடாமல் முன்னேற வேண்டும். உம். சரி. நீ உன் தாயிடம் செல். நான் நாட்டுக்குள் சென்று பார்வையிட்டு வருகிறேன். நிலைமை முன்னிலும் சற்று முன்னேறியிருப்பதாகத்தான் தெரிகிறது. பனித் தீவிலிருந்து பொன் மேனிராயனுக்குச் சிலப் புதுப்படைத்துணை உடன்படிக்கையும் நடந் தேறியிருப்பதாக வதந்தி, வஞ்சகப் பதரை விரைவில் சாம்பலாக்கி விடுகிறேன். வேல்விழி! நான் வருகிறேன்.

இவ்வளவு அவசரமா? சற்றுப் பொறுங்களேன் போகலாம்.

இப்பொழுது புறப்பட்டால்தான் நள்ளிரவுக்குள் திரும்பிவர முடியும்.

இனியும் கொஞ்சம் இருள் சூழட்டும் வெளிச்சம் நன்றாக மறைந்தபின் போவதே நல்லது. தாங்கள் அடிக்கடியும் நாட்டுக்குள் போகக்கூடாதென்று நான் தடுப்பதை தயவுசெய்து பொறுத்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/74&oldid=537635" இலிருந்து மீள்விக்கப்பட்டது