பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தச் செம்மல்

105

வேறல்ல என்றும் அறிவுறுத்தினர்... ‘வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம்’ என்று விளம்பினர்!”

மெய்கண்டாரால் அருளப்பெற்ற ‘சிவஞானபோதம்’ நூலுக்குச் சிவஞான முனிவர், ‘குறிப்புரை’ தவிரப் ‘பாடியமு’ம்(அதாவது பேருரை) எழுதியுள்ளார். கற்றுவல்லார்க்கே புரியும்படி அமைந்த உரைகள் அவை. ஆனால் உரைவேந்தரோ, ஆங்காங்கே புரியும் படியான விளக்கம் தருகின்றார்.

முனிவர், “கடவுளை ‘அந்தம்’ என்றது ‘உபசாரம்’ என்பார். உரைவேந்தரோ, “உபசாரமாவது, காரண காரியங்கள், குண குணிகள், பொருள் வினைகள், பொருளிடங்கள்,சினைவினை முதல் வினைகள், பண்பு புலன்கள் ஒன்றினொன்று மாறிவரும் இலக்கண விசேடம்!” என்று விளக்குவார். இப்படி, நூல் முழுவதும் காணலாம்.

உரைவேந்தர், மதுரையில் நடந்த சைவசித்தாந்த சமாச ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவை, ‘ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை’ என்னும் நூலாகத் தருமை ஆதீனம் வெளியிட்டுள்ளது.(1945)

திருஞான சம்பந்தப் பெருமானின் தோற்றம் குறித்துக் குறிப்பிடுமபோது,

“பகவதியார்(சம்பந்தரின் அன்னை) இவரைக் கருக் கொண்டிருந்த போதே, தம் நினைவு செயல் முழுவதும் சிவபரம்பொருளின் திருவருளிலே ஈடுபடுவதாயிருந்தனர்.... ஞானசம்பந்தப் பிள்ளை - யாரை மனங்குளிரப் பெற்றுப் பாலூட்டியபோதும், அப் பகவதியார், சிவபெருமான் திருவடிக்கண் பதித்த அன்போடு பாலூட்டினார்!”

என்று கூறியதனோடமையாது, உரைவேந்தர், வரலாற்றுச் சான்றொன்றையும் தருகின்றார்:


“ஒரு தாய், கருவுற்றிருக்குங் காலத்தே, எத்தகைய நினைவு, செயல்களை மேற்கொள்ளுகின்றாளோ,