பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

அவற்றிற்கேற்பவே அவள் வயிற்றிற் பிறக்கும் குழந்தையின்பால் அத்தகைய நினைவு செயல் கட்குரிய குணஞ்செயல்கள் உண்டாகும் என்று இக்காலத்தறிஞர் கூறுவர். மேனாட்டில், முற் காலத்தில் நிகரற்ற வீரனாய்த் திகழ்ந்த நெப் போலியன் என்பானை, அவன் தாய் கருவுற்றிருந்த போது, உயரிய வீரர் வரலாறுகளைப் படித்துக் கொண்டிருந்தாள்; அதனால் அந்த நெப்போலியன், உலகு முற்றும் உட்கத்தக்க உயர்வீரனாய் விளக்கமுற்றானென்று சான்றும் காட்டுவர்...!”

இதனைப் படிக்கும் தாய்மார்கள், மகப்பேறு காலத்தில் தாமும் நன்னெஞ்சமுடையோராய், நல்ல சைவ நூல்களில் மனத்தைச் செலுத்துவோராய் விளங்குவரன்றோ?

‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டாரைப் பற்றியும், ‘சைவ சித்தாந்தம்’ பற்றியும் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இதோ உரைவேந்தர் கூறுகின்றார்:

“தத்துவஞானமும் சமயஞானமும் ஒன்றுக்கொன்று படிமுறையில் இருப்பது கண்டே, ‘மெய்கண்ட தேவர்’ தாம் அருளிய சிவஞான போதத்தில் முன் ஆறு சூத்திரங்களால் ‘தத்துவ ஞானமு’ம்; பின் ஆறு சூத்திரங்களால் ‘சமய ஞானமு’ம் வழங்கியுள்ளார்... “நம் தமிழ்நாட்டில் திருமூலர் கால முதலே இரண்டும் ஒன்றாய்ப் பிரிப்பறப் பிணைந்து வந்திருக்கின்றன. இடைக்காலத்தே முதலில் சமய ஞானமும், பின்னர்த் தத்துவஞானமும் சிறப்பு நிலை பெற்றன. ஞான சம்பந்தர் முதலிய சமய குரவர் காலத்தில், சமய ஞானமும், மெய்கண்டார் முதலிய சந்தான குரவர் காலத்தில், தத்துவ ஞானமும் சிறப்புற்று நின்றன என்பது வரலாறு அறிந்தோர்க்குத் தெரிந்த செய்தி

யாகும்”!

என்று இவ்விரு ‘ஞானம்’ பற்றிக் கூறும் இவர்,