பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


‘தமிழர்க்கு இரண்டு கண்கள்’ என்று சொல்லத்தகுவன தொல்காப்பியமும், திருக்குறளும்; ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகிய ‘தொல்காப்பியம்’, தமிழர்செய் நற்றவத்தால், நூல் முழுமையாகக் கிடைத்துள்ளது. இதற்கு அக்காலத்தே உரைகண்டவர் பலர். அவருள் முதன்மையானவர்.இளம்பூரணர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்ட சான்றோர். இவர்தம் உரையே, பின்னர் வந்த உரையாசிரியர்கட்குக் கலங்கரை விளக்கம்' எனலாம். நயவுரை காண்பதில் நாயகர் இவர்!

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம் பெறுவது ‘உவமையியல்’. ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் காண்பது ‘உவமை’ எனப்படும். இதனை விளக்க வந்த இளம்பூரணர்,

“இதனாற் பயன் (உவமையியலின் பயன்) என்னை மதிப்பதோ வெனின், புலன் அல்லாதன புலனாதலும்; அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும். ‘ஆப் போலும் ஆமா’ என உணர்த்திய வழி, அதனைக் காட்டகத்துக் கண்டான், முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ‘ஆமா’ என்று அறியும். ‘தாமரைபோல் வாள்முகத்துத் தையலீர்’ என்றவழி, அலங்காரமாகிக் கேட்டார்க்கு

இன்பம் பயக்கும்!”

என்பர். ‘உவமையின் பயன்யாது?’, என்பதற்கான விளக்கம் இது. இருவகைப் பயன்கள்; ஒன்று; தெரியாத ஒன்றைத் தெரியப் படுத்துதல். (எ.டு.) ‘காட்டுப் பசு (ஆமா) எவ்வாறு இருக்கும்?’ என்று ஒருவன் கேட்டால், அது வீட்டுப் பசுவை(ஆ)ப் போல்