பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லற ஏந்தல்

21


1. திருவள்ளுவன் - பிறந்த சில நாட்களில் இறந்து போனான்

2. பாலகுசம் - கணவர் இரமணன் (காதல் மணம்)

3. நடராசன் - மனைவி தாரா

4. மணிமேகலை - கணவர் சுப்பிரமணியம்

5. திலகவதி - கணவர் நரசிம்மன்

6. தமிழரசி - கணவர் குமாரவேலு

7. ஆண்மகவு - பிறந்த சில நாட்களில் இறப்பு

8. திருநாவுக்கரசு - மனைவி முத்துலட்சுமி

9. திருஞானசம்பந்தன் - மனைவி சந்திரிகா

10. மெய்கண்டான் - மனைவி சீதா

11. நெடுமாறன் - மனைவி கலாவதி

உரைவேந்தர் ‘மணிமேகலை’ என்ற நூலினை எழுதுங் காலத்துப் பிறந்த மகவுக்கு ‘மணிமேகலை’ என்றும் மெய்கண்டார் அருளிய ‘சிவஞானபோதம்’நூலினை எழுதுங்காலத்துப் பிறந்த மகனுக்கு ‘மெய்கண்டான்’ என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

உரைவேந்தர் குடும்பங்களில் ஒருவருக்காவது ‘நடராசன்’ என்று பெயர் வைப்பது தொன்று தொட்டுவரும் வழக்கமாக இருந்துள்ளது!

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில் ‘உரைவேந்தர்’ சொற்பொழி வாற்றிக் கொண்டிருக்கும்போது தம் குழந்தை (7ஆவது) இறந்த செய்தி வந்தது. 'அக்குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுக; கூட்டம் முடிந்த பின் வருகிறேன்' என்று சொன்னாரெனில் இவரது கடமையுணர்வையும் ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று எண்ணும் மனவுறுதியையும் அறிய முடிகின்றது.

துணைவியார் உலோகாம்பாளே, பிள்ளைகளை நன்முறையில் பேணிவளர்த்த பெருமாட்டியாவார்! பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருப்பார்; சில நேரங்களில் வெகுண்டு கடிந்துரைப்பதும் செய்வார்.

உரைவேந்தர் இறந்தபின் (1981), தமது இறுதிக்காலம் வரை (ஏறத்தாழ 70 வயது வரை), மருத்துவராகத் திகழ்ந்த மகன் மெய்கண்டானது இல்லத்திலேயே இருந்து, காலமானார். மெய்கண்டானின் மனைவி சீதாவின் பேரன்பும் பராமரிப்பும் உலோகாம்பாளுக்கு இருந்தது!