பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

51


                                 2.  ஆராய்ச்சி நெறியின் பொருட்டு, அருஞ்
                                                 சொற்பொருள் அகரநிரலும், துணைசெய்த
                                                 நூல்நிரலும் சேர்க்கப்பட்டுள்ளன.

                                 3.  ஒப்புநோக்கும் கருத்தால் ஒருசில இடங்களில்
                                                 சிவஞானமாபாடியக் கருத்துக்களும், பாண்டிப்
                                                 பெருமாள் உரையும் காட்டப்பட்டுள்ளன.

                                 4.  நூன்முகத்துக்கு இன்றியமையாமைபற்றி,
                                                 நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறும்;
                                                 நூற்பொருளைப் பயில விரும்புவோர்
                                                 பொருட்டுச் சிவஞானபோதச் செம்
                                                பொருளும் பிறவும் முன்னர்த் தரப்பட்டுள்ளன.
                                                (இதில் வரும் ‘சிவஞான போதச் செம்பொருள்’
                                                பின்னர்த் தனி சிறுநூலாகவும்,வெளிவந்துள்ளது!)


சிவஞானமுனிவரின் ‘சிவஞான மாபாடியம்’ என்னும் பேருரையையும், சிற்றுரையையும் படித்துப் பொருள் காண்பதென்பது கற்றுவல்ல புலவர்க்கே சிறிது கடின்மாகும். ஆயினும் உரைவேந்தர், துணிந்து இப்பணியைச் செய்துமுடித்தார். இது குறித்து இவர் கூறுவது வருமாறு:

“சிவஞான போதத்தின் சிறப்பையும்,சிற்றுரையின் மாண்பையும் நோக்குமிடத்து, எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது. எனினும் எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற் கொண்டு, அவரது அருள் ஞானத்தை நன்குபெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரைகளைக் கருவியாகவும், திருஞான சம்பந்தர் முதலிய சிவஞானப் பெருஞ் செல்வர் களின் செம்மொழிகளை முதலாகவும் கொண்டு, இப்பணியினை ஆற்றுதற்கு என் உள்ளம் ஒருப்படவே, ஒருவாறு யான் இயன்ற அளவு செய்துள்ளேன்!”

சைவசிந்தாந்த ஆழ்கடலில் நன்முத்து எடுத்துக் கொணரும் வல்லமைபடைத்தவர் உரைவேந்தர். எனினும் இவ்வாறு கூறுவது, இவரது பணிவுடைமையைக் காட்டுவதாகும்.