பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

57


‘தமிழ்நாவலர் சரிதை’ என்ற நூல், முன்பே அச்சானது; இதன்கண் ‘இறையனார்’. முதல் ‘அந்தகக் கவி வீரராகவ முதலியார்’ வரை 51 புலவர்களின் வரலாறும், அவர்கள் பாடிய பாடல்கள், அவை பாடப்பட்ட சந்தர்ப்பத்தோடு யாரோ ஒருவரால் தொகுக்கப் பட்டிருந்தன. இது, சென்னைப் பல்கலைக்கழக ‘வித்துவான்’ தேர்வுக்குப் பாடமாக இருந்தது; அத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்க்கு இந்நூலைக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்த உரைவேந்தர், கல்வெட்டுக்களையும், பிற வரலாற்று நூல்களையும் ஒப்ப நோக்கிக் கற்பித்து வந்தார். அப்போது இதன்கண் காணப்படும் பாடல்களுக்கு இயன்ற அளவு குறிப்புக்கள் தேடித் தொகுத்து வைத்திருந்தார்.

இதற்கிடையில் தி.த.கனகசுந்தரம்பிள்ளை வெளியிட்ட பிரதியும், உரைவேந்தரின் தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியாரிடமிருந்த கையெழுத்துப் பிரதியும், கோவை சி.கு. நாராயணசாமி முதலியார் வெளியிட்ட பிரதியும் வைத்திருந்தாராதலின், இம்மூன்றையும் கொண்டு ஒப்பு நோக்கியதில் பல திருத்தங்கள் செய்யவேண்டியதாயிற்று. அத்தகு திருத்தங்களுடன் கழக வெளியீடாக இந்நூல் 1972இல் வெளிவந்தது.

இதன்கண், செய்யுள்தோறும் ஆராய்ச்சிக்குறிப்புக்கள் தரப் பட்டுள்ளன. இடையிடையே கல்வெட்டுச் சான்றும் உள்ளன. மேற்கோளாக ஆங்கிலம் உட்பட 64 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் உள்ள அரும்பொருள் அகரவரிசை படிப்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

‘உரைவேந்தர், ஒரு வரலாற்றுப் பேராசிரியர்’ என்று சொல்வதற்கு ஏற்ப, இவர் எழுதிய மற்றொரு நூல், வரலாற்றுக் காட்சிகள் என்பது. இதனை மதுரையிலுள்ள ஒரு புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாட்டு வரலாற்று அறிவு, சென்ற காலங்களில் மக்கள் முன்னேற்றத்துக்கு இடையூறு செய்த தடைகளை உணர்ந்து, எதிர்காலத்தில் அவை மீளவும் தலைகாட்டாதவாறு தற்காத்துக் கொள்ளு தற்குத் துணைபுரிகிறது. இந்த உண்மையை அறிந்த மேனாட்டு வரலாற்று அறிஞர்கள், வரலாற்றுப் புகழ் படைத்தவர் சிலருடைய வாழ்வில் சிறப்பாகக் குறிக்கத் தக்க நிகழ்ச்சிகளைத் தேர்ந்து, சிறு சிறு கதை வடிவில் தந்து, கல்வி பயிலும் மாணவர்களின் இளமையுள்ளங்களைப் பண் படுத்தியுள்ளனர். அவர்களுடைய இந்த நன்முயற்சி