பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

63


பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து,வரன் முறையில் தெளிவுபடுத்துவதும், அத்தெளிவுரையைத் ‘தென்னுண் தேக்கிய செஞ்சொற்’களில் தொடுத்து உரைப்பதும் (உரைவேந்தரின்) உரை நடையின் மாண்பாகும்!”

என்பர் ‘கலையன்னை’ இராதா தியாகராசனார். இதற்குக் கீழ்க்கண்ட நற்றிணைப் பாடலைச் சான்றாகவும் காட்டுவர்.

‘பொருள் வயிற் பிரிந்த தலைவன், பருவமுணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது’ என்னும் துறையமைந்த பாடல், ‘இருங்கண் ஞாலத்து’ (நற்றிணை:157) என்று தொடங்குவது. இளவேட்டனார் பாடியது. ‘இளவேனிற் பருவத்து வருவேன்’ என்று கூறிப் பொருள் வயிற் பிரிந்துபோன தலைமகன், சென்று வினை முடிக்குமுன்பே, கூறிய பருவம் வந்துவிட்டது; அதனை அறிந்து தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சமே இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ் ஒசையை, நம் காதலி கேட்டுக் கேட்டு மாறாது வருந்துவாளே’ என்று வருந்திக் கூறியதாக அமைந்த பாடல். இதன்கண்

“...நாட்பத வேனில் இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சம்”

எனும் பகுதி வந்துள்ளது. இதனை, உரைவேந்தர் விளக்கும் திறம் வருமாறு:

“காவும் சோலையும் கவின்பெறு பொழிலும் புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும்புள்ளும் மகிழ்ந்து விளையாட, மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற்காலம், காதலில் பிணிப்புண்ட இளமை உள்ளங்கட்கு இன்பக் காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின் தேங்கோள் இன்னிசைக் கண், தலைமகனது கருத்துச் சென்றமையின் ‘இணர்துதை மாஅத்த புணர்குயில்’ என்றும்; குயிலின் இன்னிசை கேட்போர் உள்ளத்தில்