உரைநயம் கண்ட உரவோர்
65
காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும்
கனவிற்கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும்
ஆரியர் நிறைந்து வாழும் இமயம்!... கவரிமானும்
நரந்தம் புல்லும் இமயமலைச் சாரலில் மிகுதியாக
வுண்மையின் இவற்றை விதந்தோதினார்!”
என்று புத்துரை காணும் உரைவேந்தர், இதற்குச் சான்றாக, ‘நரந்தம் நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுனை பருகியயல. தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை யதுவே வான்றோய் இமயம்’ என்று ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடலை (132) மேற்கோள் காட்டிப் பழைய உரையை மறுக்கின்றார்.
சிக்கலை அவிழ்த்தல்
திருவள்ளுவர்,
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்”
என்று கூறியவர்,
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா(து) உஞற்று பவர்”
என்று கூறியுள்ளார். இஃது ஒரு சிக்கலான இடம். பலரும் பலவிதமாக அமைதி கூறுவர். உரைவேந்தர், மிக அருமையான விளக்கம் தந்து, சிக்கலை அவிழ்த்து விடுகின்றார்:
“‘பழுத்த பழம் மரத்தில் நில்லாது’ என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி, தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்தி விடுமே யன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல், விதைபயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல் போல், வினை ஊழ்த்தல் தன் பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி, மேலும் வினைகளாகிய தன்