பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப் பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல, ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கனிக்கு அஃது இயற்கையறமாதல் போல, ஊழ் வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கை யறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலி மிகப்பெரிது என்பதுபற்றி, ஆசிரியர், ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்!”

-இவ்வாறு 'ஊழின் வலிமை' பற்றிக் கூறும் உரைவேந்தர், 'உப்பக்கம் காண்பர்' என்பதற்கும் சரியான விளக்கம் தருகின்றார்.

“பழுத்துவரும்பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே; இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியில் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றனர். ‘ஊழையும் ஊழ்க்காது கெடும்’ என அதன் வினையால் கூறாமல், ‘ஊழையும் ஊழ்க்காதவாறு இடையூறு செய்வர்’ என்பது தோன்ற, ‘உப்பக்கம் காண்பர்’ என்று ஆசிரியர் கூறுவது, நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஓடுவதை இயற்கை யறமாகக் கொண்ட தண்ணீரும், இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல் போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது