பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


சொற்பொருள் ஆய்வு

உரை கூறுங்கால், சொற்களுக்கு அருமையான பொருள் தந்து விளக்குவது உரைவேந்தரின் இயல்பு. இங்கே ஒரு சில சொற்பட்டியல் தரப்படுகின்றது:

மூவன்

இஃது இயற்பெயர். ‘மூப்பன்’ என்னும் சொல் போல்வது. ‘அம்மூவனார்’ என்பதும் இப்பெயரடியாக வருவதே.

பாடவேறுபாடு காட்டல்

உரைவேந்தர், தாம் ஆராய்ந்த ஏடுகள், கல்வெட்டுக்கள் முதலியன கொண்டு, ‘பாடவேறுபாடுகள்’ பலவற்றைத் தெளிந்து கூறுகின்றார். அவற்றுட் சில:

தவறானவை சரியானவை
கருங்குழலாதனார் - கருங்குளவாதனார்
ஆடுதுறை மாசாத்தனார் - ஆவடுதுறை மாசாத்தனார்
தும்பி சொகினனார் - தும்பைச் சொகினனார்
மாற்பித்தியார் - மாரிப்பித்தியார்
வெறிபாடி காமக்கண்ணியார் - வெறியாடிய காமக்காணியார்
நெடுங்கழுத்துப் பரணர் - நெடுங்களத்துப் பரணர்
ஐயூர் முடவனார் - ஐயூர் மூவனார்
அரிமணம் - அரிமளம்


வானநூற்கருத்து

உரைவேந்தர், தம் உரை நூல்களில், வானநூற் கருத்துக்களையும், சோதிடக் கருத்துக்களையும் சுட்டிச் செல்கின்றார். சங்க காலத்தே, வானநூற் புலமை சான்ற தமிழ்ப்புலவர்கள் இருந்துள்ளனர் என்பதையும் குறிப்பிடுகின்றார் இவர்