உரைநயம் கண்ட உரவோர்
79
நினைப்போம்.அதுபோலவே, ஒருகால் தோற்று -
விக்கப் பட்ட உலகம், தோன்றியது கொண்டு
பெற்றுக் கொள்ள வேண்டிய பயனைப் பெற்றுக்
கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப்
படுவதாயிற் றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு
தடுத்திருந்த தடையினால் மீளத் தோற்று
விக்கப்படுகிற தென்றும் எண்ண வேண்டும்.
‘அத்தடை யாது?’ என ஆராய்ந்து, அதாவது ‘மலம்’
என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி,
மலத்தால் மீள அவ் ஒடுங்கி யினின்றே உளதாம்
என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்!”
(பக். 58,59)
இவ்வாறு எளிய உதாரணங்களால் அரிய கருத்தை விளக்குவது உரைவேந்தரின் இயல்பு.
இது, சிவஞான முனிவரின் ‘சிவஞான போதச் சிற்றுரை’ கற்று வல்லார்க்கே யன்றி ஏனையோர்க்கு அத்துணை எளிதில் புரியாது. இதனை உளங்கொண்ட உரைவேந்தர், பலர்க்கும் புரியும் வண்ணம் அடிக்குறிப்பில் விளக்கம் தருகின்றார். அவற்றில் சில:
நூலின் தொடக்கத்தில் ‘உரைப்பாயிரம்’ ஒன்று உள்ளது. அதற்கு உரை கூறும் போது சிவஞான முனிவர்,
“சைவாகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள்
வைத்து,
ஞானபாதத்தோதியபொருள்களைஆராயும்ஆராய்ச்சி,
இந்நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது...!"
என்று குறிப்பிடுவர்.
இதில் கூறப்படும் ‘சைவ ஆகமங்கள்’ எத்தனை என்பதும், ‘நாற்பாதங்கள்’ எவை என்பதும் பலர்க்கும் தெரியாவாதலின் உரைவேந்தர், பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:
“சைவாகமங்கள், ‘காமிகம்’ முதலாக இருபத்தெட்டு
வகைப்படும். அவை: காமிகம், யோகசம், சிந்தியம்,
காரணம், அசிந்தம், தீபிதம், சூக்குமம், சகச்சிரம்,
அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம்,