பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


பின்னர் என்ற சொற்களின் ஈற்றில் நிற்கும் ‘அர்’ என்பது போல, ‘ஐ’ என்னும் இறுதிநிலையை நோக்கப் ‘பண்’ என்பது முதனிலையாதலின், அதனைப்பகுதி என்றும், அப்பொருளே ஐகாரத் தாலும் வற்புறுத்தப்படுதல் பற்றி, பகுதிப் பொருள் விகுதி என்றும் கூறினார். ‘பழமதுவும்’ என்ற இடத்து, ’அது’ என்பதும் பகுதிப் பொருள் விகுதி!”

(ப.48)

என்றும்;

“உண்டிவினை-உம்மைத் தொகை” என முனிவர் கூறியதற்கு,

“உண்டியும் வினையும் வருதற்குரியது, ‘உம்’மை யின்றி, ‘உண்டிவினை’ எனவந்தமையின் ‘உம்மைத் தொகை’ யாயிற்று”

(ப.99)

என்றும்;

முனிவர், “தனது சத்தி சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தல் கூடுமென்பது ‘குறிப்பெச்சம்’... ‘இன்றி’ என்னும் வினையெச்சக் குறிப்பின் ‘இகரம்’ செய்யுளாகலின் உகரமாய்த் திரிந்தது. அன்றே-அசை, இவ்வியல்பு சித்தாந்த நெறி யுணர்ந்தார்க்கு அன்றி விளங்காது என்பார் ‘அருட்கண்ணார் கண்ணுக்கு’ என்றார்!” என ஓரிடத்து எழுதுவர்.

இதற்கு,

“திருவருளாகி சத்தி, சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தலை, காரைக்காலம்மையார், ‘அருளே உலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்பதானால்-அருளாலே, மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும், எப்பொருளு மாவதெனக்கு!’(அற்பு.9) என்று அருளுவது காண்க! “குறிப்பெச்சம், ‘சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்’

(தொல். சொல்.24)