பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

93


அவையோர் இதனைக் கேட்டு மகிழாதிருப்பரோ? உரை வேந்தரின் நாவன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

உரைவேந்தர், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; அப்புலமை, தமிழ் உயர்வுக்கும், சைவ மாண்புக்கும் கை கொடுத்து உதவியது.

தூத்துக்குடி சைவசிந்தாந்த சபை ஆண்டுவிழாவில் தலைமை தாங்கிப் பேசிய பேச்சில், இத்தகைய தன்மையைக் காணமுடிகின்றது.

உரைவேந்தர், தமது தலைமையுரையில், மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்கள் பலவற்றைச் சைவசித்தாந்தக் கருத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்:


“ ‘வந்தவாறு எங்ங்னே போமாறேதோ, மாயமாம் பெருவாழ்வு’ என்றார் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர் போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக் கூறி, ‘இந் நிலவுலகிற்கு மக்களுயிர் வந்தது தற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது’ என்று சர் சேம்சுசீன்சு உரைத்தார். ‘தற்செயல்’ விளக்கமில்லாத சொல்லாதலின், ‘வந்தவாறு’ காண்டதற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்! “பின்பு அவர், ஜன்சுடைன், கீசன்பர்க் திராஅக் இலமேத்தர் லூயி- தெ-புரெக்ஸி முதலாயினார் கண்ட பெளதிகவுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவஞானம் என்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண், பிரபஞ்சம் ‘கடசக்கரர் எந்திரம் எனச் சுழல்வது’ (காஞ்சிபுராணம்-காப்பு) எனக் காண்கின்றார். முடிவில் இது, ‘படைக்கப் பட்டதே’ என்று தேறி, ‘இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும்’ எனவும்; ‘இதனைப் படைத்தோன், ஓவியம் வல்லான் ஒருவன், தான் திட்டும் ஓவியக் கிழிக்குப் புறம்பே நின்று ஓவியத்தை எழுதுவது போல, காலம் இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு