பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

97

அழிந்துபடும் அழிபொருள் அன்று! நின்று பயன்படும் அறிவுப் பொருள்!”

என்று தமிழ்ப்புலவர் பெருமை கூறிவிட்டு,

“தமிழ்ப் புலமை பெற்றார் அரசியல், வாணிகம், தொழில், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் கருத்தைச் செலுத்தும் நேர்மையுடைய தமிழா - சிரியர்கள் ஆதல் வேண்டும் என்பது என் தனிக்கருத்து! தமிழ் மனமும், தமிழறிவும் உடை யோர், அரசையும், வாணிகத்தையும் தொழிலையும், பிறவற்றையும் மேற்கொண்டாலன்றிச் சூழ்நிலை மாறுதற்கு வாய்ப்பில்லை! தமிழர்களின் அறிவுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே தமிழல்லாத வேறு மொழிகள் குறுக்கிட்டு நிற்கும் சூழ்நிலை இன்று, தமிழாசிரியர்களின் தமிழ்ப் பணிக்குப் பெரியதோர் இடையூறு; அதனைத் தகர்த் தெறிவது தமிழறிஞர் கடனாகும்!”

என்று தமிழாசிரியர் ஆற்றவேண்டிய கடமை குறித்தும் சுட்டிக் காட்டுகின்றார் உரைவேந்தர்.

தம்பால் தனியாகத் தமிழ் பயின்ற மாணவர் ஒருவரைக் குறித்து, இம் மாநாட்டு வரவேற்புரையில் உரைவேந்தர் குறிப்பிட்டார்.

“ஏறக்குறைய 40 ஆண்டுகட்கு முன்பு, கறுத்த மேனியும் சிரித்த முகமும், ஆர்வநெஞ்சமும் அடையப் பெற்ற ஒரு சிறுவன், தனித்த முறையில் என்பால் தமிழ் பயின்றான். அவனுக்குத் தொல் - காப்பியச் சொல்லதிகாரத்து உரைகாரரான சேனா வரையரும் நச்சினார்க்கினியரும் மாறுபடுகின்ற இடங்களைக் காட்டிய போது, முடிவு காண்பதில் அவனுடைய அறிவு நுணுகிச் சென்று, உண்மை கண்டு ஒளிவிட்டுத் திகழ்ந்தது. ‘பயலே! நீ படித்து நீதித் துறையில் செல்வாயானால் மிக்க சிறப்-