பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

இந்திய சமுதாய... /மனிதத்துவ சமுதாயம்


‘திருமண விழாவில் கச்சேரி செய்ய, பூவும் பொட்டும் இழந்த பெண்ணையா கூப்பிடுவார்கள்! சே!’ என்று தள்ள முடிந்திருக்கிறது.

‘இவளுக்கா உங்கள் வாக்குரிமைகள்? இவள் நடத்தை கெட்டவள்?’ என்று புழுதியை வாரி எறிந்தால், அவள் திறமை எதுவும் தெரியாது.

‘ஓ, இவளுக்கு இந்தப் பதவி எப்படிக் கிடைத்தது? அறிவினால் அல்ல; உடம்பினால்’ என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணில் வெற்றியின் காரணத்தை வெளிச்சம் போட முடிந்தது.

‘அதிகாரி ஆணாக இருந்தால், ‘ஸ்ஸ்… இன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லை… வீட்டுக்குச் சிக்கிரம் போக வேண்டும்’ என்று சொல்லித் தப்பித்து விடலாம். இளகிய நெஞ்சு சரி, ‘போங்கள்-போங்கம்மா’ என்று சொல்வார். ஆனால் இந்தக் குரங்கு மூஞ்சி இருக்கிறதே! இது கல்நெஞ்சு. ‘அப்ப குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இரு! வேலை என்று எதற்கு வரவேண்டும்! இன்று முழுதும் முடித்து விட்டுத்தான் போக வேண்டும்! எத்தனை மணி யானாலும் சரி!’ என்று சொல்லும். ‘புருஷன், பிள்ளை குட்டி என்று இருந்தால் தானே? இந்த முகரைக்குக் கல்யாணமே இல்லாமற் போய்விட்டது!’ என்று சினிமாவுக்குப் போக முடியாத அலுவலகப் பெண் கருத்தை வீசுவதைக் கேட்க முடிந்தது.

‘என்னடி பத்தினி மாதிரி நடிக்கிறாய்! உனக்கு எதிர் காலம் இல்லாமல் செய்துவிடமுடியும்’ என்று ஆண் ஆதிக்கமும்,

‘ஏய் என்ன மிரட்டுறே? உன்னை இந்த இடத்தில் இருந்து கிளப்பாமல் போனால்… நான்… நானில்லை?’ என்று சூளுரைக்கும் பெண் சக்திகளும் இதே ஆட்சியின் தருமத்தில் தான் வலிமை பெற்றிருக்கின்றன.