பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

25


இந்தக் குறிப்புக்கள் எல்லாமே, தாயாண் சமுதாயம் தந்தையாதிக்க மாற்றத்துக்கு உட்பட்டதைச் சுட்டுவதாகவே தோன்றுகின்றன. பல இடங்களில் அதிதி என்ற தாய் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவருடைய மைந்தர்களுடன், இவள் எல்லையற்ற வண்மை, செல்வங்கள் அன்பு எல்லாவற்றையும் பொழிபவளாகத் துதிக்கப்படுகிறாள். அவற்றில் இவளுடைய கணவர் என்ற தந்தை நாயகக் குறிப்பு இல்லை.

ஒடுக்குவதற்கு இடமில்லாமலே தம்மினத்தாய்ப் பிரதிநிதியாகி விட்ட அதிதியும் எழும்பி நின்று போராடிய தாயாண்மைத் தலைமை ஒடுக்கப்பட்ட வரலாற்றுக்குரியவளாகத் தனுவும் இந்தப் பாடல்களில் இடம் பெற்றுத் திகழ்கின்றனர்.

அசுர இனத்தார் தீயவர், தீமைகளுக்கே உருவகமானவர் என்று சித்திகரிக்கப்பெற்று, காலம் காலமாக நிலை நிறுத்தப் பட்டு வந்திருக்கிறது.

இந்திய சமுதாயக் கலாசார வரலாறு, எத்தனையோ முரண்பாடுகளைச் சீரணம் செய்திருக்கிறது. ஆனால் பரசுராமன் செய்த தாய்க்கொலை இந்திய மண்ணில், இன்றளவும் சீரணம் செய்யப்பட்டிருக்கவில்லை.

புராணங்கள் வாயிலாகவும், நாடோடிக்கதைகள், இலக்கியங்கள் வாயிலாகவும், தொன்னாடெங்கும் குடி கொண்டுள்ள கிராம தேவதைகளின் வாயிலாகவும் நிலை நிறுத்தப்பட்ட பரசுராமர்-ஜமதக்கினி-ரேணுகா வரலாறு, இந்தியப் பெண் தொடர்பான சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நிலை பெறுகிறது.

தாயாண்குடி மரபில் வந்த ரேணுகை, தந்தை நாயக முனிவரின் மனைவியாகிறாள்.

பெண் தன் கருப்பை உடைமையினால் தாய்த்தன்மை இயல்பினால், ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத மூல