பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

63


சட்டபூர்வமாக்கப்படாது, ஆனால் பல பரிமாணங்களில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்து, பொருளாதார அடிப்படையையே ஆட்டிப் படைக்கும் பெண்ணுடல் வாணிபத்தில் சீர்குலைக்கப்படும் அபாக்கிய வதிகளை, எந்தத் தொழிற்சங்கமும் கணக்காக்குவதில்லை.

இவர்கள் ஓசைப்படாமல் உருக்குலைக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் தங்கள் படைப்புத்திறனுக்காக, கலை ஆற்றலுக்காக, தேசிய அரசினால் கவுரவிக்கப்பட்டுப் புகழுக்கும் பதவிகளுக்கும் உரியவர்களாகிறார்கள்.

அந்நாள் மரியா மக்தலேனாவுக்கு இறையருள் கிடைத்தது. புத்தர் காலத்தில், உடலால் அழிந்த அபாக்கிய வதிகள் பிக்குணிகளாகக் கடைத்தேறும் உய்வு கிடைத்தது. ஆம்ரபாலி, ஆனந்தரால் ஆன்மீகப்படி ஏறினாள்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிப் பிடிக்கும் இந்த யுகத்தில், 'ஆன்மீகம்' என்று ஒன்றே சுயநல ஆதிக்கங்களால் விழுங்கப்பட்டு விட்டன. கணவனும் மனைவியுமாக வெளியே சென்று திரும்புகையில் மனைவி முரடர்களால் குலைக்கப்படுகிறாள். அது அவள் குற்ற மாகிறது; பதிதையாகிறாள்; கணவனால் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.

அரசியல் அடிதடிகளோ, சமயக்கலவரங்களோ எது நிகழ்ந்தாலும் பெண்ணின், மீதுதான் அது விடிகிறது. கற்பழிப்புக் குற்றத்துக்கான சட்டங்களில், இவளுக்கு நியாயம் என்பது குதிரைக்கொம்பாக இருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கற்பு, கற்பின்மை என்ற விவகாரத்தில், பெண் இன்னமும் தெளிவில்லாத நியதிகளிலேயே தன்னைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதே உண்மை.