பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இந்திய சமுதாய... /துணை இழப்பும் துறவறமும்


இவ்வளவுக்கும் நான் பெற்றது யாது!

அவர்கள் வெறுப்பே!

ஏற்றுக் கொள்ளப்படாத வாணிபப் பொருள் போல் தாய் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப் பெற்றேன்.

இரண்டாம் முறையாக ஒரு செல்வச் சீமானுக்கு மண முடித்தார்கள்.

அவனும் ஒரு குற்றமும் அறியாத என்னை ஒரு மாதத்துக்குப் பிறகு திருப்பி அனுப்பி வைத்தான்.

ஒரு நாள் ஒர் இளம் பிக்கு, தந்தை வீட்டுக்கு வந்தார்.

பெற்றோர் அவரிடம், துறவு வாழ்க்கையை விட்டு தம் குற்றமற்ற மகளை மணந்து கொள்ள வேண்டினர்.

பிக்கு இசைந்து, என்னை மணம் முடித்தார்.

ஆனால், ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை வாழ்வு. அவர் அவளைவிட்டு மீண்டும் துறவியாகவே சென்றார்.

நான் எனது பெற்றோரிடம், 'உயிரை மாய்த்துக் கொள்வேன்.’

‘அல்லது என்னைத் துறவு கொள்ள அநுமதியுங்கள்’... என்று மான்றாடினேன்.

ஜீன தத்த... பிட்சு எங்கள் இல்லம் வந்தார்.

நான் துறவியானேன்...

இவ்வாறே, சுபா என்ற துறவியின் வரலாறு விரிகிறது.

பிக்குணி சுபா, ஜீவகனுக்குச் சொந்தமான மாந் தோப்பில் உலவிக் கொண்டிருந்தாள். ஜீவகன் வந்து வழிமறித்தான்.

‘நான் தனிமை விரும்புகிறேன்; புனிதமானவள்; நீ மாசுற்ற மனதினன். விலகிப் போ!’ என்று வெருட்டினாள் சுபா.