26
'இந்தி' பொது மொழியா?
முதல் உருது மொழியிற் செய்யுள் நூல் இயற்றி, அதனைப் பலரும் பயிலும்படி செய்தவராவர். இவர் பாடிய செய்யுட் களிற் பல 'நவாபு' மன்னர்களைப் புகழ்ந்து பாடுவன வாயும், வேறு பல மகமது முனிவரையும் அவர் தம் உறவினரையுஞ் சிறப்பித்துரைப்பனவாயும், மற்றும் பல தம்மால் உவர்க்கப்பட்டவைகளைப் பழித்துக் கூறுவன வாயும் இருக்கின்றன. இப்புலவர் காலம் முதற்கொண்டே, அஃதாவது இற்றைக்கு 180 ஆண்டுகளாகவே உருது மொழி நூல் வழக்குடைய தாகி நடைபெறும் வகை நினைவுகூரற்பாலதாகும்.
இனி, வடக்கே வங்காளத்திற் பெருந் தொகுதியின ரான மக்களாற் பேசப்படுவதுஞ், சமஸ்கிருதச் சிதைவு களான சொற்கள் மிகக் கலக்கப்பெற்றதுமான 'வங்காள' மொழி, நூல் வழக்குடையதாகத் துவங்கியது, இற்றைக்கு 400 ஆம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த 'காசீராம்' என்னும் புலவர் வடமொழியிலுள்ள மகாபாரதத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்துச் செய்த காலந்தொட்டே யாம். அவர்க்கு நெடுங்காலம் பின்னே தோன்றிய 'ராஜாராம் மோகன்ராய்' என்னும் அறிஞர் வங்காள மொழி யுரை நடையிற் பல சிறந்த ஆராய்ச்சி நூல்களுஞ் சீர்திருத்த நூல்களும் வரைந்து வெளிப்படுத்திய பின்னே தான் வங்காள மொழி பெருஞ் சிறப்படைய லாயிற்று. ஆகவே, சென்ற 150 ஆண்டுகளாகத்தாம் வங்காள மொழி சீர்திருத்த முற்றுச் சிறக்கலாயிற்றென்பதை உணர்தல் வேண்டும்.
இன்னும், மராட்டி, குஜராத்தி முதலான மொழிகள், பாகதச் சிதைவுஞ் சமஸ்கிருதச் சிதைவுமான சொற்கள் சொற்றொடர்கள் நிரம்பக் கலக்கப்பெற்றுச் சிறுதொகை யினரான மக்களாற் பேசப்பட்டு வருகின்றன. கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலிருந்த 'நாமதேவ்' என்பவர் தாம் முதன் முதல் மராட்டி மொழியிற் சில பதிகங்கள் இயற்றினவர். அவர் காலத்தும் அவர்க்குப் பிற்காலத்தும் வந்த 'திந்யா