பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

'இந்தி' பொது மொழியா?


திராவிட மொழிகளை நோக்கக் ' கன்னட மொழி' ஒன்றே சிறிதேறக்குறைய ஆயிர ஆண்டுகளாகச் சீர் திருத்தம் எய்தி நூல் வழக்குடைய தாய் வழங்கா நிற்பது. இதனை முதலிற் சீர் திருத்தி வழங்கியவர்கள் சமண் சமயத்தினரும் அவரை அடுத்து அதன்கண் நூல்கள் இயற்றியவர்கள் வீரசைவ சமயத்தினரும் ஆவர். கன்னட மொழியில் முதன் முதல் நூல் இயற்றினவர் இற்றைக்கு 1080 ஆண்டுகளுக்கு முன் 63 ஆண்டுகள் அரசு புரிந்த " ராஷ்ட்ரகூட' மன்னனான நிருபதுங்கனது அவைக்களத் திருந்த 'ஸ்ரீவிஜயர் ' என்னும் புலவரேயாவர் ; இவர் இயற்றிய நூல் 'கவிராஜ மார்க்கம்' என்னும் பெய ருடையது. ப்சவரைத் தலைவராய்க் கொண்ட வீரசைவ ஆசிரியர்களாற் 'பசவபுராணம்' என்பது கி. பி. 1369ஆம் ஆண்டிலும், 'பத்மராஜ புராணம்' என்பது கி.பி. 1385ஆம் ஆண்டிலும் ஆக்கப்பட்டன. இவ்விரு சமயத்தவர்க் கிடையே தோன்றிய வைணவ சமய ஆசிரியர்களாற் ' பாரதம்', ' இராமாயணம் ', 'பாகவதம்' முதலான பல நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்டன. ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே வழங்கிய கன்னட மொழி தனித் தமிழாயிருக்க, அதற்குப் பின்னே சைன வீரசைவ வைணவப் புலவர்களாற் கையாளப்பட்ட கன்னடமோ வடமொழிச்சொற்கள் சொற்றொடர்கள் கதைகள் நிரம்பக் கலக்கப் பெற்றுத் தன்றன்மை யிழந்து வழங்குவதாயிருக்கின்றது. ஆனா, பழைய தனிக்கன்னடத்தில் இயற்றப்பட்ட நூல் ஒன்று தானும் இஞ்ஞான்று கிடைத்திலது. இனிக், கன்னடத்திற்கு அடுத்தபடியிற் பழைமை யுடைய தாகக் கருதற்குரியது தெலுங்கு மொழியேயாகும். இம்மொழியை வழங்கினவர்கள் 'ஆந்திரர்' எனப் பழைய இந்துதேய வரலாற்றின்கட் சொல்லப்படுகின்றனர். சாதவாகனர்க்' குரிய ஆந்திரகுலமானது கி. மு. 180 ஆண்டிலேயே, அஃதாவது இற்றைக்கு 2117 ஆண்டு களுக்கு முன்னரேயே வலிமையிற் சிறந்த அரசர்களை