பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

'இந்தி' பொது மொழியா?


தமிழ்ச்செல்வர்கள் வன்கண்மை செய்யினுந், தம்மொடு தொடர்பின்றி வாழும் மற்றைக் குடிமக்கட்காவது எந்த வகையிலாயினும் ஏதேனும் உதவி செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இந்த நிலைமையில் தமிழ்ப்பயிற்சி பரவுவதெங்ஙனம் ? இனி, அச்செல்வர்கள், அத்தி பூத்தாற்போல் அங்கொருவர் இங்கொருவராக அருகிக் காணப்படுந் தமிழ் கற்றார்க்காவது, அக்கற்றார் தமது தமிழறிவைப் பலர்க்கும் பயன்படுத்துதற்காவது, அல்லது அவர் இயற்றும் நூல்கட்காவது எந்த வழியிலேனும் எட்டுணை யு தவியாவது செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இத்தகைய பயனில் செல்வர்கள் உள்ள இந்நாட்டில் தமிழ்க் கல்வி பரவாதது ஒரு புதுமையா ? இனி, ஆங்கிலரின் சீரிய நிலையைச் சிறிது தேர்ந்து பார்மின்கள்! ஆங்கிலரிற் செல்வராயிருப்பாரெல்லாருந் தமது தாய்மொழியை நன்கு கற்றவர்கள் ; அதனால் அவர்கள் கல்வியின் அருமை பெருமையும் அதனைப் பெற்றவர் பெறும் பெரும்பயனும் நன்குணர்ந்தவர்கள். பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ பேரானந்தம் உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உரு தவரே கன்னெஞ்சம் உடையா ராவர்" என்று தாயுமான அடிகள் அருளிச்செய்தபடி கல்வியை வருந்திப் பெற்றார்க்கே கல்வியின் அருமை தெரியும்! கல்வியறிவு பெருத கசடர் அதன் சிறப்பும் பயனும் யாங்ஙனம் அறிவர் ? ஆங்கிலரில் அரசர்க்கரசராய்த் திகழும் மாவேந்தர் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தில் மிகுந்த புலமையுடையராதலுடன், இலத்தீன், கிரீக்கு , பிரஞ்சு, செர்மன் முதலான அயல் மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அம்மாவேந்தரின் கீழ் மன்னர்களாய் உள்ளவர்களும், அவர்க்கு அமைச்சர், படைத் தலைவர்,