பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?


இவ் இந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் 'இந்தி' மொழியை, இவ்விந்திய நாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று, அதனையே பொதுமொழியாக வழங்கிவரல் வேண்டுமென்று, இந்நாட்டின் நன்மைக் காக உழைக்கும் வட நாட்டறிஞர் பலரும் தென்னாட் டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன், ஆங்காங்கு இந்தி மொழிப் பள்ளிக்கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஒரு நாட்டிலுள்ளார் நன்மைக் கென்று செய்ய எடுத்த ஒரு செயல், அந்நாட்டிலுள் ளார்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா? அந்நாட்டவர் எத்தகைய நிலைமையில் இருக்கின்றனர்? அஃது அவர்க்கு எவ்வகையான நன்மையைச் செய்யும்? என முதலில் ஆராய்ந்து பார்த்துப், பின்னர் அதனைச் செய்தலே, உண்மையான அறிவும் உண்மையான தேயத்தொண்டும் வாய்ந்தார்க்கு இன்றியமையாத கடமையாம். ஆகையால், இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையது தானா என்பதனை முதற்கண் ஆராய்வாம்.

பழைய நாகரிக மொழிகள்

மக்களுள் ஒருவர் தமது கருத்தைப் பிறர் ஒருவர்க்கு இடர்ப்படாது தெரிவித்துக்கொள்ளுதற்குக் கருவியா புதவுவதே ஒரு மொழியின் முதற்பயனாகும். இந்நிலவுல கத்தின் பலபிரிவுகளில் உள்ள பல்வகை மக்கட் பகுப் பினருந் தாந்தாங் கருதியவைகளைத் தம்மொடு தொடர் புடையார்க்கு அறிவித்தற் பொருட்டு வழங்கிவரும்