பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண்டவன் தந்த கை

ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அள்ளிச் சோறு தின்பதற்கு.
 
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு ?
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழகாய் எழுதிப் படிப்பதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அனுதினம் வேலை செய்வதற்கு.

ஆண்டவன் தந்த கை எதற்கு?
அனைவருக் குதவி செய்வதற்கு.
 
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அவரை நன்றாய்த் தொழுவதற்கு.