பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஓடி ஓடி ஆனதுவே ஓடை!-நீர்
ஓடி ஓடி ஆனதுவே ஓடை!


காடு மேடு பெய்தமழை வெள்ளம்
கரைத்துக் கரைத்து வைத்தபெரும் பள்ளம்!


ஓடை பல ஒன்று சேர்ந்தால் ஆறாம்!
ஓடி ஓடி ஊட்டும்பல ஊராம்!


கல்லி டுக்கில் பாய்ந்துபாய்ந்தே பாடும்!
கன்செய் புன்செய் கண்டுகடல் ஓடும்!


ஓடை இல்லா ஊருக்கழ கில்லை!
நீர்வ றண்டு போனால்வரும் தொல்லை!



10