பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தென்னை நீண்ட தென்னை!
தென்னம் பிள்ளை அழகு!
தன்னை வளர்த்தோர்க்(கு) என்றும்
தலையால் கொடுக்கும் தென்னை!


பாளை விரித்துச் சிரிக்கும்!
பச்சை மட்டை விரிக்கும்!
தோளில் தேங்காய்க் குலையைத்
தொங்க விட்டே நிற்கும்!


தென்னை போல வளர்வோம்!
செவ்விள நீரைத் தருவோம்!
அன்னை தந்தை யார்க்கும்
அளிப்போம்; வாரி அளிப்போமே!

11