பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


திண்ணை ஓரம் படுத்திருக்கும்;
திருடன் வந்தால் குரைத்திருக்கும்;
கண்ணை மூடிக் காதைத்துக்கிக்
காவல் காத்துக் கொண்டிருக்கும்!


வாலை ஆட்டி மகிழ்ச்சிகாட்டும்;
வழிக்கு நல்ல துணையுமாகும்;
காலை நீட்டிப் படுத்தெழுந்து
களிப்பில் துள்ளிப் பாய்ச்சல்காட்டும்:


காயை மறக்கக் கூடாதே!
நாயை என்றும் அடிக்காதே!
நாயும் நன்றி மறக்காதே!
நன்றி நீயும் மறக்காதே!

12