பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணில்


வாலைத் தூக்கிக் கத்திக் கத்தி
மரத்தில் பாயும் அணிலே !-பழுத்த
மரத்தில் பாயும் அணிலே !
காலைத் துாக்கிக் கோதிக் கோதிக்
கடிப்ப தென்ன அணிலே ?-நீயும்
கடிப்ப தென்ன அணிலே ?


வெள்ள ரிக்காய்த் தோலைப் போல
வெள்ளைக் கோடு முதுகில் ! - மூன்று
வெள்ளைக் கோடு முதுகில் !
பிள்ளை அணிலே ! உனக்குத் தீட்டிப்
பிறக்க விட்டார் யாரே ?- அழகு
சிறக்க விட்டார் யாரே ?

17