பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செடியில் பூக்கள் பூத்ததே !
சிட்டுப் புதரில் பாடுதே !
படிக்க வேண்டும் ; எழுந்திரு !
பாப்பா ! பாப்பா ! எழுந்திரு !

வானம் கிழக்கில் வெளுத்ததே -
மரத்தில் காக்கை கரையுதே !
ஏனே தூக்கம் ? எழுந்திரு !
எழுந்து படிநீ! எழுந்திரு !

சேவல் கூவி அழைக்குதே !
தெருவில் நாயும் குரைக்குதே !
கூவிப் பாடம் படிக்கவேண்டும் ;
குழந்தாய் ! குழந்தாய் ! எழுந்திரு !

29