பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணே! மணியே! தூங்கு!
கண்ணை மூடித் துாங்கு!

பாலும் தருவேன்; தூங்கு!
பழமும் தருவேன்; தூங்கு!
காலை நீட்டித் தூங்கு!
கண்ணே! மணியே! தூங்கு!

பொம்மை தருவேன்; தூங்கு!
பொங்கல் தருவேன்; தூங்கு!
அம்மா வந்தால் அடிப்பார்;
அழாதே கண்ணே! தூங்கு!

வெல்லம் தருவேன்; தூங்கு!
விடிய விடியத் தூங்கு!
நல்ல நல்ல கதைகள்
நானும் சொல்வேன்; தூங்கு!

30