பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மையே சொல்வோம்!-என்றும்
உண்மையே சொல்வோம்!

உதைகள் கொடுத்தாலும்,
கைகால் ஒடித்தாலும்,
உண்மையே சொல்வோம்-என்றும்
உண்மையே சொல்வோம்!

மண்ணில் நிலைப்பது உண்மையே ஆகும்!
வாழ்வில் நிலைப்பது உண்மையே ஆகும்!
எண்ண இனிப்பது உண்மையே ஆகும்!
எவரும் புகழ்வதும் உண்மையே ஆகும்!

உண்மையால் உயர்ந்தவர் நாட்டினிற் கோடி
உண்டென்று நாமெலாம் ஒன்றாகக் கூடிப்
பண்ணோடு தாளத்தைக் கொட்டியே ஆடிப்
பாடுவோம் பாடுவோம் பாடுவோம் ஓடி!

35