பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்கண்டதெய்வம்

கற்றுக் கொடுத்தவர்,
கண்ணைக் கொடுத்தவர்
கண்முன் வருந்தெய்வமே! - தம்பி !
கற்றுத் தெளிந்தபின்
வற்றாப் பெருஞ்செல்வம்
கல்வியப் பெருஞ்செல்வமே - தம்பி !

அறிவுக் குவியலை
அள்ளிக் கொடுத்தவர்
ஆசிரியர் அன்றியாராம் ? - தம்பி !
அறிவைக் கொடுத்தவர்,
வாழ்வைக் கொடுத்தவர்
அன்னைக்கும் தந்தைக்கும் மேலாம் !