பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவர்


உழவர் நிலத்தை உழுவார் ;
உழுத நிலத்தில் விதைப்பார் ;
பழுதில் லாமல் நீரைப் பாய்ச்சிப்
பயிரை நாளும் வளர்ப்பார் !

நிலத்தில் களையை எடுப்பார் ;
நெல்லுக் கெருவைக் கொடுப்பார் ;
தலையைத் தாழ்த்தி விளைந்த செந்நெல்
தங்கக் கதிரை அறுப்பார் !

களத்தில் நெல்லை அடிப்பார் ;
கட்டி மூட்டை எடுப்பார் ;
உளத்தில் மகிழ்ச்சி பொங்கப் பொங்க
உண்டு வழங்கிக் களிப்பார் !

52