பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


ஆற்றும் துணையால் அறம்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்

காப்படையக் கோடல் இனிது.

6



அந்தணர் ஒத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்

கொண்டடையா னாகல் இனிது.

7



ஊரும் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதம்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை

பேதுறார் கேட்டல் இனிது.

8



தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்

அன்புடைய ராதல் இனிது.

9



கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண் பிலாதவரை அஞ்சி அகறல்

எனைமாண்பும் தான்இனிது நன்கு.

10