பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12




அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத்

துண்ணாப் பெருமைபோல் பீடுடைய தில்.

11



குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவும் தீர் வின்றேல் இனிது.

12



மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே
தானம் அழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.

13



குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும்

போழ்தும் மனன் அஞ்சான் ஆகல் இனிது.

14



பிற்ன்மனை பின்நோக்காப் பீடினிது ஆற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்வு இனிதே
மறமன்னர் தம்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கம் கேட்டல் இனிது.

15