பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

 மற்றொருவனது கைப்பொருளைப் பறிக்காதவனாய் வாழ்வது இனிது. அறச் செயல்கள் புரிந்து, அல்லாத தீய செயல்களை விட்டொழிப்பது இனிது. மாட்சிமையற்ற குழப்பவாதிகளை மறந்தும் சேராத வழியறிந்து வாழ்தல் இனிது.

21

வருமானத்தின் அளவறிந்து பிறர்க்கு வழங்குதல் இனிது. ஒருவர் சார்பு இல்லாத சொந்த ஊக்கம் இனி யது. பெரும் பயன் வருவதுபோல் தெரியினும் (மனம் போன போக்கில்) விரும்பியவற்றை யெல்லாம் செய்யா தவராய், அறநெறியினின்றும் திரியாமல் வாழ்வது இனிது.

22

சோலையோடு அறத்திற்குக் (தருமத்திற்குக்) குளம் தோண்டியமைத்தல் மிகவும் இனிது. அந்தணர்கட்குப் பசு வோடு பொன் அளித்தல் முற்பட இனிது. தீவினைக்கு அஞ் சாதவராய், - செய்யும் தொழிலிலும் பேசும் பேச்சிலும் சூது வைத்துச் செயல்படுபவரை நீக்குதல் இனிது.

23

எடுத்த செயலில் வெற்றி பெறுவதற்காகச் சினங் கொள்ளாமல் செயல்படுபவனது நோன்பு இனிது. ஒரு குறிக்கோளைக் கொண்டவன் இயன்றவரையும் பொறை யுடைமை இனிது. முடியக் கூடியதில்லாத ஒன்றை விரும்பி, ஏங்கி, துன்பப் படாதவராய்ச் செய்யக்கூடிய செயலைத் தேர்ந்து செய்தல் இனிது.

24

மெய் - வாய் - கண் - மூக்கு - செவி - என்னும் ஐந்து பொறிகளின் வழி வரும் வேணவாவை (பேரவாவை) அடங்கச் செய்தல் முன் இனிது. கை நிறையப் பொருள் கிடைக்கினும் கல்லாத மூடரைச் சேராமை இனிது. நிலையில்லாத கொள்கையுடன் மன ஒருமை இல்லாத மாந்தரைச் சேராமல் விடுதல் இனிது.

25