பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.

31




கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையின் பாங்கினிய தில்.

32



ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.

33



எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பிணிதே
புல்லிக் கொளினும் பொருளில்லார் தம்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.

34



ஒற்றினான் ஒற்றிப்பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலராய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.

35