பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தம்மை அண்டியவரின் துன்பம் மிகாதபடித் தணித்தல் இனிது. கடன் வாங்கியாவது செய்யவேண்டிய நல்லனவற்றைச் செய்வது இனிது. சிறப்பாய் அமைந்த கேள்வியறிவு உடையவராயினும், எதையும் ஆய்வு செய்து தெரிந்து மொழிதல் மிகவும் இனிது.

31

கற்றறிந்தவர் அறிவுறுத்தும் செயல் கொள்கை இனிது. குடிமகனிடம் அன்பு செலுத்தாத அரசன்கீழ் வாழாதிருத்தல் முற்பட இனிது. தெளிவாக ஆராய்தல் இன்றித் தம்மை நம்பிவிட்டவரைத் தீமை அடையச் செய்யாத அன்புடைமையினும் இனிய பண்பு வேறில்லை.

32

ஊரார் வெறுக்காத நற்செயல்களைச் செய்து நடக்கும் ஊக்கப் பண்பு மிகவும் இனியது. தலைவன் தானே சோம்பல் கொண்டிராத செயல்வீரம் முன் இனிது. வாள்கள் மோதும் படைகள் நிறைந்த போர்க்களத்தில் பின்னிடாத பெரிய வேந்தரின் சேனையைத் தடுத்து வெல்லல் இனிது.

33

இராக் காலத்தில் வழிப்பயணம் செல்லாமை முன் இனிது. நற்கருத்துகளைச் சொல்லும்போது சோர்வில்லாமல் சொல்லுதலின் சிறப்பு இனிது. அவரே வலியவந்து தழுவிக் கொண்டாலும், பொருட்படுத்தத்தகாத அற்பரின் நட்பைக் கொள்ளாமல் விட்டொழிப்பது இனிது.

34

வெற்றி வேல் வேந்தர்க்கு, ஒற்றர்களால் உளவு அறிந்து அதன் உட்பொருளைத் தெளிதல் முன் இனிது; நிலைமையை முற்றுமாக அறிந்து நீதி செலுத்துதல் முன் இனிது; சிலரிடத்தில் மட்டும் பற்று இல்லாதவராய், பல உயிர்கட்கும் வளங்களைப் பங்கிட்டு உறச் செய்து நன்முறை அறிந்து நடத்தல் இனிது.

35