பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினம்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாம் கொண்டுதாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.

36



இளமையை முப்பென்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்று உணர்தல் இனிது.

37



சிற்றாள் உடையான் படைக்கல மாண்பினிதே
நட்டார் உடையான் பகைஆண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து.

38



பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒருஉம்
ஒற்கம் இலாமை இனிது.

39



பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலின் காழ்இனிய தில்.

40