பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

மனம் புழுங்கிப் பொறாமை பேசாமை முன் இனிது. திருந்திய பண்பாளனாய், கோபத்தை அழித்து நீக்கி வாழ்தல் இனியது. தாம் கண்டவற்றை யெல்லாம் மனம் கவ்விக்கொண்டு விரும்பிப் பற்றிக் கொள்ளாதவராய் விட்டுவிடுதல் இனிது.

36

இளமையை முதுமை எனக் கருதி நல்லதே செய்தல் இனிது. உறவினரிடத்தில் அச்சம் கொள்ளாத பேச்சைக் கேட்பது இனிது. சிறந்த மென்மையான மூங்கில் போன்ற தோள்களையும் தளிர் போன்ற மிருதுவான மேனியை பும் உடைய பெண்களை நஞ்சு என்று ஆடவர் உணர்வது இனிது.

37

சிறிய காலாள் படையை யுடைய மன்னனது மிக்க ஆற்றலுடைய படைக் கருவிகளின் சிறப்பு இனிது. நட்பரசர்கள் பலரை உடைய வேந்தன் பகைவரை வெல்லும் வீரம் முன் இனிது. நிரம்பப் பால் சுரக்கும் கன்றுபோட்ட பசுக்களை உடையவன் செய்யும் விருந்து, எல்லா வகையிலும் மிகவும் இனியது என்று உலகினர் கூறுவர். (கன்று + ஆ = கற்றா = பசு).

38

பிச்சை எடுத்து உண்பவன் சினமின்றிக் கேட்டல் இனிது. ஒதுக்குக் குடியிருந்து துன்பம் மிக உறாத சிறப்பு இனிது. மிக்க ஆதாயம் விரும்பி, அறநெறியைக் கைவிடும் வறுமை உணர்வு இல்லாமை இனிது.

39

பத்துவகைப் பொருள்கள் கொடுத்தாயினும் சொந்த ஊரில் இருந்து வாழ்வது இனிது. விதையைக் குத்தி உண்ணாத சீர்மை மிக இனிது. நன்னெறி கூறும் நூல்களைத் தவறு இன்றிப் பலப்பல காலத்தும் கற்றுவருவதைக் காட்டிலும் ஒளி தரும் இனிய செயல் வேறு இல்லை.

40