பக்கம்:இன்னமுதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பாக்கம் திருவொற்றியூரில் கண் இழந்த நம்பியாரூரர் ஒவ்வோர் ஊராகச் சென்று இறைவனை வணங்கித் திருவெண்பாக்கம் என்ற ஊரை அடைந்து, தம் கண் இழந்த நிலைக்கு வருந்தித் தம்முடைய தோழனாகிய சிவபெருமானை நோக்கி, “கோயிலுக்குள் நீ இருக்கின்றாயா?" என்று கேட்க, இறைவன் உள்ளே யிருந்து அயலார்போல, "உ(ள்)ளோம், போகீர்’ என்றானாம், நம்பியாரூரர் தாம் செய்த பிழையை நினைத்து வருந்திப் பாடிய பாடலாகும் இது. (திரு எவ்வுளுரை அடுத்துள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் உள்ளே திருவெண்பாக்கக் கோயில் இப்பொழுது அமிழ்ந்துவிட்டது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/52&oldid=747056" இலிருந்து மீள்விக்கப்பட்டது