பக்கம்:இன்னமுதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 ●

இன்னமுதம்


இல்லாததும், தீமை பயப்பதுமாகிய பாடல்களைக் கேட்டு, பாடி, வீண் பொழுது கழிப்பதைவிட இவை போன்ற சிறந்த பக்திப் பாடல்களைப் படிப்பதாலும் பாடுவதாலும் மனநிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுவதோடுகூடச் சிறந்த பயனும் ஏற்படுகின்றது.

ஒரு நாடு முன்னேற வேண்டுமேயானால், அதிலுள்ள இளம் குழந்தைகள், நல்ல பண்பாட்டில் பயிற்றுவிக்கப்படுவதுதான், சிறந்த வழியாகும். அந்த முறையில் குழந்தைகளுக்குப் பயன்படத்தக்க இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து இசைத்தட்டுகளாக வெளியிடும் நல்ல பணியை மனமுவந்து செய்ய முன்வந்த “சரஸ்வதி இசைத்தட்டு நிறுவனத்தார்”, அதன் அதிபர் திரு.ஏவி.மெய்யப்பன் அவர்களையும் பாராட்டுகிறேன். பாடல்களின் பொருளை விளங்கிக் கொள்வதுடன் இசையமைப்பையும் கற்றுக்கொள்ளும் முறையில் பாடல்களைத் தரப்படுத்தி உரையுடன் வெளியிட்டனர். திருக்கோயில்களிலும் பள்ளிக்கூடங் களிலும் இவ்விசைத்தட்டுகளை மிகுதியும் பயன் படுத்திப் பயனை அடைய என்னுடைய பேரவா ஆகும்.


எம். பக்தவத்ஸலம்
முன்னாள் முதல்வர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/6&oldid=1549129" இலிருந்து மீள்விக்கப்பட்டது