பக்கம்:இன்னமுதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகு திரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய்குடிப் பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே "குழல், யாழ், கூத்து இவற்றால் ஏற்படும் ஒலியும், இறைவனை ஏத்தும் ஒலியும் எல்லாவிடங்களிலும் கூட்டமாகப் பெருகவும், விழா எடுக்கின்ற ஒலியும் சேர்ந்து தேவர் உலகத்தையும் சென்று அடைகின்ற சிறப்புமிக்க திருவாரூரில், இடப வாகனத்தை உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாகத் தொண்டு செய்கின்ற குடியிற் பிறந்த பழமையான அடியார்களுடன் சேர்ந்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுவோமாக.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/65&oldid=747070" இலிருந்து மீள்விக்கப்பட்டது