பக்கம்:இன்னொரு உரிமை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 சு. சமுத்திரம்


முன்னால் பார்த்தான். பல்வேறு வாகனங்கள். மஞ்சள் நிறம் மாறும் முன்பு, குறுக்கு நடைபாதையைக் கடக்கப் பறந்துகொண்டிருந்தன. பின்னால் பார்த்தான். ஏராளமான வாகனங்கள் அவன் காரை இடிக்காத குறையாய் ஹார்ன் சப்தங்கள் மூலம் நச்சரித்துக்கொண்டிருந்தன. லிங்கையா, முன்னால் ஒடிய வாகனங்களை இடைவெளி கொடுக்காமல் எட்டிப் பிடிக்கும் நோக்கத்துடனோ என்னவோ... வேகவேகமாய்க் காரை ஒட்டி, சாலையின் மத்தியில் முள்வேலிபோல் வெள்ளைக் கோடுகள் போட்ட நடைபாதையைத் தாண்டப் போனபோது-

திடீரென்று காரின் முன்னால் தோன்றிய ஒருத்தி, 'எம்மா' என்ற கத்தலுடன் பின்பக்கமாய் விழுந்தாள். காரின் வலதுபக்கம் மல்லாந்து கிடந்தாள். வலது காலில் பலத்த அடி. கண்ணில் போட்டிருந்த கண்ணாடி சுக்கல் சுக்கலாகிப் பரவிக் கிடந்தது. அவள் 'எம்மா... எம்மா...' என்று மெல்ல முனங்கி, 'என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க' என்று பெரிது பெரிதாய் ஊளையிட்டு, ஒடப்போகிற உயிரைப் பிடிக்கப் போகிறவள்போல கைகளைத் தலைக்கு மேல் கொண்டுபோய் அங்குமிங்குமாய் ஆட்டினாள்.

விங்கையா வண்டிக்குள் சிறிதுநேரம் மரத்துப் போய்க் கிடந்தான். வாகனங்களில் போனவர்கள் அவற்றை நிறுத்தாமலே அவனை வைதபடியே ஒட்டம் பிடித்தார்கள். நடைபாதை வாசிகள் சாலையின் ஒரு பக்கத்தை அடைத்தார்கள். அந்த அம்மாவை அனுதாபத்துடனும், அவனைக் கோபமாகவும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'ஒ. சர்க்கார் காரா.. அதான்' என்று அரசு டிரைவராக செலெக்டாக முடியாமல் போன ஒருத்தன் உறுமினான். லிங்கையா சுதாரித்துக் கொண்டான்.

அடிபட்டவளைச் சூழ்ந்த கூட்டத்தை விலக்கியபடி உள்ளே போனான். வலியால் துடித்த வலதுகாலை இரு கரத்தால் ஏந்தியபடியே 'என் பிள்ளிங்க... என் பிள்ளிங்க...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/75&oldid=1368984" இலிருந்து மீள்விக்கப்பட்டது