பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

தமிழர், வெள்ளம், வெள்; வெள்கல் என ஆகி அச்சத்தைக் குறிப்பதும் உணர்க. வெள்கல்-அச்சம் வெள்ளம் விரைவது. இவையும் அன்றி, விண் வீழ் கொள்ளியும் நில நடுக்கமும், பெருங்காற்றும், துன்பம் ஆயின. விலங்கு அணுகலும், நோய் அணுகலும் துன்பமே இடைக்காலத்தில் மக்களை மக்கள் நலிவு செய்ய அணுகலும், துன்பமாயிற்று. இனி, இன்பம் என்பதன் பொருளை நோக்குவோம்.

இன்பம் (துன்பம்) இல்லாதது! இன்பம், இன்மை, இல், என்பனவற்றை நோக்குக.

இல்லல்-கடத்தல்; துன்பத்தைக் கடத்தல் என்பது பொருள்.

மேலும் கடி என்பது இன்பத்திற்குப் பெயர், கடி-நீக்கம்:(துன்பம்) நீங்கிய நிலை.

எனவே, ஐயுற, துணுக்குற, நடுக்குறத் துன்னுவது-வருவது துன்பம் என்பதும். அஃது இன்மையே இன்பம் என்பதும் தெளிவு.

இதனால், தீ நெருங்குதல் முதலியவை இல்லாத இடத்து, நிலவுவது இன்பமோ? எனின், ஆம், வேறென்ன? அவ்வாறாயின், ஒருவன் தூங்கும்போது மேற்சொன்னவை அவனை, நெருங்குவதில்லையாதலின் அப்போது அவன் நிலை இன்பமோ எனில் அது, இன்பமும் அற்ற நிலை என்க. ஆயினும், தூங்கல் என்பது சோர்வை