பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


அறிவொடு பட்ட மனவலிமையொடு தனக்கும் உலகினருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிப்பதாக ஒரு நற்குறிக்கோளைக் கொண்டு அதனை யடைய முயலுதல் இன்பம் நுகர்தற்கு முதல் நிலையெனலாம். அறிவு, தொழில் நிகழ்த்த வேண்டிய களத்தையும் காலத்தையும், தொழிலின் வலிமையையும் உணர்த்த அதன்வழி நின்று தொழிலைச் செய்யுங்காலை அத்தொழிலின் வெற்றி தோல்விக்கிடையே துணிந்த நிலையாலோ, துணியாத நிலையாலோ ஏற்படும் எதிர்நிகழ்ச்சிகளை வரவேற்று தன்னுள்ளுணர்ச்சியனைத்தையும் ஒரு சேர அவ்வெதிர் நிகழ்ச்சிகளுக்கு எதிர் நிறுத்திச் செய்யும் போராட்டமே ஒருவனுக்குச் சிறந்த இன்பத்தை பேரின்பத்தை அளிப்பதெனலாம். பொதுவாக எந்தத் தொழிலாக இருந்தாலும் ஒரு சிறு முட்டுப்பாடும் இல்லாது தன் வழியே இயங்கி முடிவு பெறுமானால் அதனை உயிர்ப்பு இல்லாத தொழில் அல்லது ஒரு இயந்திரம் நிகழ்த்தும் தொழில் என்றே இயம்புதல் வேண்டும். தொழில் நிகழ்ச்சிக்கிடையே உண்டாகும் எதிர் நிகழ்ச்சியே இன்ப உணர்ச்சிக்குப் பிறப்பிடமாகும், எதிர் நிகழ்ச்சி எவ்வளவு வன்மையுண்ட் யதோ அவ்வளவு இன்பமும் வன்மையுடையதாகும் இத்தகைய இன்பத்தை நுகரவல்ல ஒருவனுக்கு தொழில் நிறைவேறுவதோ நிறைவேறாமையோ ஒரு பொருட்டன்று.

இனி இன்பம் நிலையானதா நிலையற்றதா என்ற விடை காண்டல் முறையாகும். இன்பம்