பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

இன்ப இலக்கியம்

காதல் இலையேல் உலகமும் உயிர்க்காது!
காதல் இலையேல் உயிரினம் பிழைக்காது!
காதல் இலையேல் கடலலை முழக்காது!
காதல் இலையேல் காய்கதிர் நிலைக்காது!

அதனல்,__

மலையினும் பெரிதாம்; வானினும் பெரிதாம்;
கடலினும் பெரிதாம் காதல்!
கதிரினும் பெரிதாம் காதல் வாழியவே!!