பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

                               இன்ப இலக்கியம்
    குடிநலம் பேணு அமைச்சாளும் நாட்டில் 
    விடுபட்டும் துன்பம் விடுபடா மக்கள் போல் 
    குடிகெட்டுப் போகும் அவளில்லா வாழ்க்கை!
     அறவாழ்க்கை ஓங்க, அறம்பேண, நம்முன்னேர் 
      காட்டிய வீரமும் ஈகையும் காட்ட,      
     இசைமன் றியக்கும் இனியநல் யாழாம்; 
    புதிதீன்ற பூங்கொத்து; புன்னகைச் சோலை; 
   மலைச்சாரல் நன் செய்; வளர்தீங் கரும்பே 
   உளந்தொட்டுப் போன இளமயில்! நானவளேப் 
   பெற்றல்நல் வாழ்வு பெறுதலும் கூடும்! ஒருவழி 
    தோழா, உரை! . . .